states

img

மத்திய பிரதேசத்தில் 4 கால்களுடன் பிறந்த குழந்தை

மத்தியபிரதேசத்தில் 4 கால்களுடன் குழந்தை பிறந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மத்தியபிரதேசத்தில் குவாலியரின் சிக்கந்தர் கம்பூ பகுதியில் வசித்து வரும் ஆர்த்தி குஷ்வாஹா என்ற பெண்ணிற்கு கமலா ராஜா மருத்துவமனையில் நான்கு கால்களுடன் கூடிய குழந்தை பிறந்துள்ளது. உடல் குறைபாட்டுடன் பிறந்த இந்த குழந்தை 2.3 கிலோ எடையுள்ளது. அதிகமாக உள்ள 2 கால்களும் செயலற்ற நிலையில் உள்ளன.
இதனால் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்து செயலற்ற கால்களை நீக்குவது குறித்த ஆலோசனையில் மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும் குழந்தைக்கு வேறு ஏதேனும் குறைபாடுகள் உள்ளனவா என்பது குறித்து மருத்துவர்கள் தொடர்ந்து பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
ஏற்கனவே மத்தியப் பிரதேசத்தின் ராட்லம் என்ற பகுதியில் கடந்த மார்ச் மாதம் இரண்டு தலைகள், மூன்று கைகள், இரண்டு கால்களுடன் ஒரு குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது